பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:28
புதுடில்லி : ‘தொலை தொடர்புக்கான, ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமம் பெறுவதற்கு செலுத்திய தொகை, அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை சேர்த்து, 2,231 கோடி ரூபாயை திருப்பித் தர, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, லுாப் டெலிகாம் நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளது.
நாட்டையே உலுக்கிய, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட், 2012ல், 122 தொலை தொடர்பு வட்டங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது. இதில், லுாப் டெலிகாம் நிறுவனம், 21 தொலை தொடர்பு வட்டங்களை இழந்தது.
ஆணையத்திடம் முறையீடு : இதையடுத்து, ‘2008ல், தொலை தொடர்பு சேவைக்காக, மத்திய அரசுக்கு செலுத்திய, 1,455 கோடி ரூபாயை திரும்பத் தர வேண்டும்’ என, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம், லுாப் டெலிகாம் முறையிட்டது. அந்த மனுவில், ‘2008 ஜன., 10 முதல், உரிமம் ரத்தான, 2012, ஏப்., 31 வரையிலான, 738 கோடி ரூபாய் வட்டியை சேர்த்து வழங்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், அரசின் தவறான கொள்கையால், 20 ஆண்டுகள் செல்லத்தக்க, ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமையை இழந்ததால், செலுத்திய பணத்தை திரும்பப் பெற, முழு உரிமை உள்ளதாக, லுாப் கூறியிருந்தது. இந்த மனு, நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தொலை தொடர்பு குறை தீர்ப்பாயத்தில், லுாப் டெலிகாம் மேல்முறையீடு செய்தது.
சுப்ரீம் கோர்ட் : இந்த மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம், ‘தொலை தொடர்பு உரிமத்திற்காக செலுத்திய பணத்தை திரும்ப அளிக்குமாறு உத்தரவிட அதிகாரம் இல்லை. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு தீர்வு காணலாம்’ என, அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், லுாப் டெலிகாம் நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த, லுாப் டெலிகாம் நிறுவனம், அதன், 21 தொலை தொடர்பு வட்டங்களில், 13 வட்டங்களில் மட்டுமே சேவையை வழங்கி வந்தது. 2014 நவம்பரில், நிறுவனம் மூடப்பட்டது.
லுாப் டெலிகாம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு‘அரசின் தொலை தொடர்பு கொள்கையில் உள்ள குளறுபடிகள் குறித்து, ஏற்கனவே தெரிந்துஇருந்தால், மொபைல் போன் சேவை வழங்க, கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்க மாட்டோம்; ஸ்பெக்ட்ரம் உரிமைக்காக செலுத்தப்பட்ட தொகையுடன், வட்டி உள்ளிட்ட இதர இனங்களையும் சேர்த்து, 2,231 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|