விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம்விஜய் மல்­லையா ஒப்­பந்­தத்தில் சந்­தேகம்; ‘செபி’ விசா­ரணை துவக்கம் ... ‘கிரெடிட் கார்டு’ சேவை வரி ரத்து:பணப்­பட்­டு­வாடா நிறு­வ­னங்கள் வர­வேற்பு ‘கிரெடிட் கார்டு’ சேவை வரி ரத்து:பணப்­பட்­டு­வாடா நிறு­வ­னங்கள் வர­வேற்பு ...
ரூ.2,231 கோடி வேண்டும் மத்­திய அரசு மீது லுாப் டெலிகாம் வழக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2016
06:28

புது­டில்லி : ‘தொலை தொடர்­புக்­கான, ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமம் பெறு­வ­தற்கு செலுத்­திய தொகை, அதற்­கான வட்டி உள்­ளிட்­ட­வற்றை சேர்த்து, 2,231 கோடி ரூபாயை திருப்பித் தர, மத்­திய அர­சுக்கு உத்­த­ர­விட வேண்டும்’ என, லுாப் டெலிகாம் நிறு­வனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்­துள்­ளது.
நாட்­டையே உலுக்­கிய, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்­கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட், 2012ல், 122 தொலை தொடர்பு வட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உரி­மத்தை ரத்து செய்­தது. இதில், லுாப் டெலிகாம் நிறு­வனம், 21 தொலை தொடர்பு வட்­டங்­களை இழந்­தது.
ஆணையத்திடம் முறையீடு : இதை­ய­டுத்து, ‘2008ல், தொலை தொடர்பு சேவைக்­காக, மத்­திய அர­சுக்கு செலுத்­திய, 1,455 கோடி ரூபாயை திரும்பத் தர வேண்டும்’ என, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­யத்­திடம், லுாப் டெலிகாம் முறை­யிட்­டது. அந்த மனுவில், ‘2008 ஜன., 10 முதல், உரிமம் ரத்­தான, 2012, ஏப்., 31 வரை­யி­லான, 738 கோடி ரூபாய் வட்­டியை சேர்த்து வழங்க வேண்டும்’ என, தெரி­விக்­கப்­பட்டு இ­ருந்­தது. மேலும், அரசின் தவ­றான கொள்­கையால், 20 ஆண்­டுகள் செல்­லத்­தக்க, ‘ஸ்பெக்ட்ரம்’ உரி­மையை இழந்­ததால், செலுத்­திய பணத்தை திரும்பப் பெற, முழு உரிமை உள்­ள­தாக, லுாப் கூறி­யி­ருந்­தது. இந்த மனு, நிரா­க­ரிக்­கப்­பட்­டதை அடுத்து, தொலை தொடர்பு குறை தீர்ப்­பா­யத்தில், லுாப் டெலிகாம் மேல்­மு­றை­யீடு செய்­தது.
சுப்ரீம் கோர்ட் : இந்த மனுவை தள்­ளு­படி செய்த தீர்ப்­பாயம், ‘தொலை தொடர்பு உரி­மத்­திற்­காக செலுத்­திய பணத்தை திரும்ப அளிக்­கு­மாறு உத்­த­ர­விட அதி­காரம் இல்லை. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் முறை­யிட்டு தீர்வு காணலாம்’ என, அறி­வு­றுத்­தி­யது. அதன் அடிப்­ப­டையில், லுாப் டெலிகாம் நிறு­வனம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது.
மும்­பையைச் சேர்ந்த, லுாப் டெலிகாம் நிறு­வனம், அதன், 21 தொலை தொடர்பு வட்­டங்­களில், 13 வட்­டங்­களில் மட்­டுமே சேவையை வழங்கி வந்­தது. 2014 நவம்­பரில், நிறு­வனம் மூடப்­பட்­டது.
லுாப் டெலிகாம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்­துள்ள மனு‘அரசின் தொலை தொடர்பு கொள்­கையில் உள்ள குள­று­ப­டிகள் குறித்து, ஏற்­க­னவே தெரிந்­து­இருந்தால், மொபைல் போன் சேவை வழங்க, கோடிக்­க­ணக்கில் முத­லீடு செய்­தி­ருக்க மாட்டோம்; ஸ்பெக்ட்ரம் உரி­மைக்­காக செலுத்­தப்­பட்ட தொகை­யுடன், வட்டி உள்­ளிட்ட இதர இனங்­க­ளையும் சேர்த்து, 2,231 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)