பதிவு செய்த நாள்
29 பிப்2016
04:28
புதுடில்லி:மத்திய அரசு, ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைத்து, வலைதளம் வாயிலான, ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, ‘கிரெடிட், டெபிட் கார்டு’களின் சேவை வரி, கூடுதல் வரி ஆகியவற்றை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கு, வலைதள பணப்பட்டுவாடா நிறுவனங்களும், வர்த்தக அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து,‘பிரிசார்ஜ்’ நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் கூறியதாவது:அரசின் முடிவால், ‘டிஜிட்டல்’ முறையில் சுலபமாக பணம் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இது, நுகர்வோர், வணிகர் என, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும். நுகர்வோரை பொறுத்தவரை, 12.5 சதவீத சேவை வரி மிச்சமாகும். மத்திய அரசும், பல ஆயிரம் கோடி சேமிக்கும்.டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளையும் பெறலாம் என்பதால், நுகர்வோர்கள் இரட்டிப்பு பயன் பெறுவர். சேவை வரி ரத்தானால், வணிக நிறுவனங்களுக்கு, டெபிட், கிரெடிட் கார்டு வாயிலான பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். இது, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, சிறு வர்த்தகர்கள், டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க தயங்கும் சூழல் நிலவுகிறது. இதற்கு, சேவை வரி வசூலிப்பால், வாடிக்கையாளர் வருகை குறைந்து விடுமே என்ற அச்சமும், பணப் பரிவர்த்தனை சேவைக்காக, வங்கிகள் அல்லது வலைதள பணப் பட்டுவாடா நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையும் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த இரு தடைகளும், சேவை வரி விதிப்பால் நீங்கும் என்பதால், வரும் ஆண்டுகளில், சாதாரண கடைகள் கூட, கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|