பதிவு செய்த நாள்
29 பிப்2016
04:35
சிங்கப்பூர்:‘தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு, வளமான வர்த்தக வாய்ப்பு வழங்குவதில், இதர வளரும் நாடுகளை விட, இந்தியா முன்னணியில் உள்ளது,’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, யு.டி.சி., ஏரேஸ்பேஸ் சிஸ்டம்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், வர்த்தக மேம்பாட்டு பிரிவு தலைவர் ரிச்சர்டு வில்மென் கூறியதாவது:பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றக் கூடிய நாடாக, இந்தியா திகழ்கிறது. பாதுகாப்பு துறையில், அன்னிய முதலீட்டை அதிகரித்திருப்பதால், புதிய தொழில்நுட்பங்களை இந்தியா பெற்று வருகிறது.
அதேசமயம், அத்தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம், உள்நாட்டிலேயே தயாரிப்பதால், பாதுகாப்பு துறை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரமும் செழிக்கும். அதற்கான சூழல் உருவாகியுள்ளது. எனவே, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் ஏற்ற இடமாக, இந்தியா திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.யு.டி.சி., ஏரேஸ்பேஸ் சிஸ்டம்ஸ், இந்தியாவில், பாதுகாப்பு துறைக்கான நவீன தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|