பதிவு செய்த நாள்
01 மார்2016
07:22
புதுடில்லி : பொதுத் துறையை சேர்ந்த, ஏர் – இந்தியா நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்காக, வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், 1,713 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.நலிவடைந்த, ஏர் – இந்தியா நிறுவனத்தை சீரமைக்க, 2012ல், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த நிதியாண்டில், திட்டம் மற்றும் திட்டம் சாரா செலவுகளுக்கு, 5,982 கோடி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், ஏர் – இந்தியாவுக்கு, 2,500 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்து, 3,300 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. வரும் நிதியாண்டில், ஏர் – இந்தியா, 3,901 கோடி ரூபாய் நிதியுதவி கோரியது; ஆனால், 1,713 கோடி ரூபாய் என்ற அளவிற்கே, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|