பதிவு செய்த நாள்
01 மார்2016
07:23
புதுடில்லி : பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, 2016 – 17ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக, பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை. வரும் நிதியாண்டில், ராணுவத்தினருக்கு, ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமலுக்கு வருகிறது. அத்துடன், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையும் நடைமுறைக்கு வரவுள்ளதால், பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். ஆகவே பட்ஜெட்டில், பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என கூறப்படுகிறது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில், அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடப்பு நிதியாண்டில், பாதுகாப்பு துறைக்கு, 2,46,727 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|