பதிவு செய்த நாள்
01 மார்2016
07:31
புதுடில்லி : ‘‘பொதுமக்களுக்கான பேருந்து போக்குவரத்தில், தனியாரை அனுமதிப்பது தொடர்பாக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்,’’ என, அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:பல்வேறு வழித்தடங்களில், பாதுகாப்பான விதிமுறைகளுக்கு உட்பட்ட, பயணிகள் போக்குவரத்து சேவை மேற்கொள்ள, தொழில் முனைவோருக்கு அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம், பயணிகள் போக்குவரத்து துறையில், புதிய முதலீடுகள் குவியும்; ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; ‘ஸ்டார்ட் அப்’ தொழில்முனைவோர் பெருகுவர். இந்த திட்டத்தால், பல்வேறு பயன்கள் கிடைக்கும். முக்கியமாக, பொதுமக்களுக்கு சுலபமான போக்குவரத்து வசதி கிடைக்கும். இத்திட்ட செயலாக்கத்திற்கான சூழலை, மத்திய அரசு உருவாக்கி தரும். அதனடிப்படையில், புதிய சட்டத்திருத்தத்தை ஏற்பது குறித்து, மாநிலங்கள் முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
‘பெர்மிட்’ ரத்தாகும்?தற்போது, பொது போக்குவரத்திற்கு, பலவகை, ‘பெர்மிட்’ பெறும் நடைமுறை உள்ளது. மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும், பேருந்து போக்குவரத்துக்கு, ‘பெர்மிட்’ வழங்கப்படுகிறது.மத்திய அரசின் புதிய திட்டத்தில், இந்த, ‘பெர்மிட்’ முறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. அதனால், ஏராளமானோர், பொது போக்குவரத்தில் இறங்குவர். அத்துடன், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, அசோக் லேலண்டு, வால்வோ, ஸ்கானியா போன்ற, பேருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையும் பெருகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|