பதிவு செய்த நாள்
01 மார்2016
10:53
மும்பை : பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் இன்று வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் முன்னேற்றத்தாலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிக ஏற்றத்துடன் துவங்கியுள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 436.23 புள்ளிகள் உயர்ந்து 23,438.23-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 134 புள்ளிகள் உயர்ந்து 7,121.05-ஆகவும் இருந்தன. தொடர்ந்து காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் எப்எம்சிஜி., வங்கி, ஐடி உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் உயர்வுடன் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.54 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.69 சதவீதமும் உயர்வுடன் இருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|