பதிவு செய்த நாள்
01 மார்2016
18:12
மும்பை : நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். வழக்கம் போலவே பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை என எதிர்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். இதுஒருபக்கம் இருந்தாலும் பங்குச்சந்தைகள் நேற்று சரிந்த போதிலும் இன்று(மார்ச் 1ம் தேதி) அதிக எழுச்சி கண்டன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. பட்ஜெட் அறிவிப்பில் அருண் ஜெட்லி நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5 சதவீதமாக குறையும் என்று கூறியிருந்தார். இதன்காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் இருதினங்களாக உயர்ந்தது. இதன் காரணமாகவும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டன. இந்த ஏற்றம் வர்த்தகம் முடியும்போது அதிக உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 777.35 புள்ளிகள் உயர்ந்து 23,779.35-ஆகவும், நிப்டி 235.25 புள்ளிகள் உயர்ந்து 7,222.30-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பங்குச்சந்தைகள் இந்தளவுக்கு உயர்வு காண்பது கடந்த ஏழு ஆண்டுகளில் இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|