வீட்டுவசதி நிறு­வ­னத்தில் ரத்தன் டாடா முத­லீடுவீட்டுவசதி நிறு­வ­னத்தில் ரத்தன் டாடா முத­லீடு ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு - ரூ.67.59 ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு - ரூ.67.59 ...
நிதித்துறை பரீட்சை : அருண் ஜெட்லி பாஸ்... ரகுராம் ராஜன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
23:44

மும்பை : நேற்று முன்­தினம் வெளி­யான, மத்­திய பட்ஜெட்,நேற்று, இந்­திய பங்குச் சந்­தையில் ஆரோக்­கி­ய­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘சென்செக்ஸ்’, கடந்த, 7 ஆண்­டு­க­ளுக்குப் பின், 777.35 புள்­ளிகள் அதி­க­ரித்து, 23,779.35 புள்­ளி­களில் நிலை கொண்­டது.
தெம்பை அளித்தது :தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’, 235.25 புள்­ளிகள் உயர்ந்து, 7,222.30 புள்­ளி­களில் நிலை­பெற்­றது. ‘‘பங்குச் சந்­தையின் இந்த எழுச்­சிக்கு,‘நாட்டின் நிதிப்­பற்­றாக்­குறை இலக்கு, 3.5 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது ’ என, மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ­ஜெட்லி, பட்ஜெட் உரையில் தெரி­வித்­தது தான் காரணம்,’’ என்­கிறார், பார்க்லேஸ் நிதி நிறு­வ­னத்தின் கரு­வூல அதி­காரி, அனிந்­தயா தாஸ்­குப்தா.நடப்பு நிதி­யாண்­டிற்­கான நிதிப் பற்­றாக்­குறை, 3.9 சத­வீதம் என, நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில், வரும் நிதி­யாண்டில், அது மேலும் உயர்த்­தப்­படும் என, பங்கு சந்­தையில் எதிர்­பார்ப்பு நில­வி­யது. அவ்­வாறு அதி­க­ரிக்­கும்­பட்­சத்தில், வங்­கி­களின் வட்டி விகிதம் உயரும்; பண­வீக்கம், விலை­வாசி அதி­க­ரிக்கும் என்ற அச்­சத்­தினால், முத­லீட்­டா­ளர்கள் பங்­கு­களை விற்கத் துவங்­கினர். இதனால், கடந்த ஒரு மாதத்தில், சென்செக்ஸ், ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான புள்­ளி­களை இழந்­தது.
இந்­நி­லையில்,சந்தை எதிர்­பார்ப்­பிற்கு மாறாக, பட்­ஜெட்டில், நிதிப் பற்­றாக்­குறை இலக்கை, 0.4 சத­வீதம் குறைத்­துள்­ளது, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தெம்பை அளித்­துள்­ளது. ஒரு­வ­ழி­யாக பட்ஜெட் நிதி நிலை குறித்த பரீட்­சையில் நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி பாஸா­கி­விட்டார். இந்­நி­லையில் மார்க்­கெட்டின் அடுத்த எதிர்­பார்ப்பு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வரி­வி­கித குறைப்­புக்­கான பரீட்­சையில் பாஸ் ஆவாரா என்­பதை நோக்கி திரும்பி இருக்­கி­றது.அதா­வது பட்­ஜெட்டில் நிதிப் பற்­றாக்­குறை இலக்கு குறைக்­கப்­பட்­டதை அடிப்­ப­டை­யாக வைத்து, ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்­கான ‘ரெப்போ’ விகி­தத்தை, ஏப்­ரலில் குறைக்கும் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.
நேற்­றைய பங்கு வர்த்­த­கத்தைப் பொறுத்­த­வரை பற்­றாக்­குறை இலக்கு மட்­டு­மின்றி, எதிர்­மறை தாக்­கத்தை உண்­டாக்­காத வரிகள், பங்­குகள் மீதான,மூல­தன ஆதாய வரிச் சலுகை நீட்­டிப்பு போன்­ற­வற்­றாலும் சூடு பிடித்­தது. அது­போல, அன்­னியச் செலா­வணி சந்­தை­யிலும், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்ந்­தது.
தொடர வாய்ப்பு : அதே­வே­ளையில்,சீனாவும், நிதி சீர்­தி­ருத்த அறி­விப்பை வெளி­யிட்­டதால், ஹாங்காங், ஜப்பான் உள்­ளிட்ட இதர ஆசிய பங்குச் சந்­தை­களும் ஏற்றம் கண்­டன.‘இந்­திய பங்குச் சந்­தையின் இந்த எழுச்சி, வரும் நாட்­க­ளிலும் தொடர வாய்ப்பு உள்­ளது’ என, நிதி வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். ரகுராம் ராஜனும் அவர் பங்­குக்கு என்ன செய்யப் போகிறார் என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.
சூடான விற்பனை : நேற்று, தேசிய பங்குச் சந்தையில், வங்கிப் பங்குகளின் விலை, எட்டு சதவீதம் வரை அதிகரித்தது. அதுபோல, வாகனம், ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)