பதிவு செய்த நாள்
02 மார்2016
10:12
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக நல்ல உயர்வுடன் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த இருதினங்களில் 77 காசுகள் உயர்வு பெற்ற ரூபாயின் மதிப்பு, இன்று(மார்ச் 2ம் தேதி) மேலும் உயர்வு கண்டன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.67.74-ஆக இருந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.67.59ஆக உயர்ந்தது.
பங்குச்சந்தைகளில் காணப்படும் முன்னேற்றம், அந்நிய முதலீடு அதிகரிப்பு மற்றும் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 57 காசுகள் உயர்ந்து ரூ.67.85-ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|