பதிவு செய்த நாள்
02 மார்2016
16:36
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக ஏற்றத்துடன் முடிந்தன. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வுடனயே காணப்படுகின்றன. குறிப்பாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் நேற்று சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று மேலும் 463 புள்ளிகள் ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 463.63 புள்ளிகள் உயர்ந்து 24,242.98-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 146.55 புள்ளிகள் உயர்ந்து 7,368.85-ஆகவும் முடிந்தன. கடந்த இருதினங்களில் மட்டும் சென்செக்ஸ் 1240 நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. குறிப்பா எஸ்பிஐ., நிறுவன பங்குகள் 12.39 சதவீதம் ஏற்றம் கண்டன. இவை தவிர்த்து ஐசிஐசிஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடோ போன்ற நிறுவன பங்குகளும் அதிகம் ஏற்றம் கண்டன. இவைகள் தவிர்த்து ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சன்பார்மா, ஐடிசி., பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகளும் உயர்வு கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|