மாற்றம் ஒன்றே மாறா­தது  கண்டு கொண்ட  கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள்மாற்றம் ஒன்றே மாறா­தது கண்டு கொண்ட கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் ... மீண்டும் தங்க சேமிப்பு பத்திரம் மீண்டும் தங்க சேமிப்பு பத்திரம் ...
ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2016
14:21

புதுடில்லி;'உலகிலேயே மிகவும் மலிவாக, 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, 'ஆட்காம்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்ப்புகள்: 'எங்களின் மொபைலை, தங்களது பெயரில், அவர்கள் விற்க முற்பட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், ஆட்காம் எச்சரித்துள்ளது. டில்லியை அடுத்துள்ள நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய்க்கு, 'பிரீடம் - 251' என்ற பெயரில், ஸ்மார்ட் மொபைல் போனை வழங்கப் போவதாக அறிவித்ததில் இருந்து பல்வேறு சிக்கல்கள், எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பல்வேறு சந்தேகங்கள்,சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை போன்றவை, இந்த நிறுவனத்தை கண்காணிப்பதாக அறிவித்துள்ளன. அத்துடன், நொய்டாவில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும், சர்ச்சை எழுந்தது. தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக நிலத்தின் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.3,600 விலையில்... இந்நிலையில், பிரீடம் - 251 மொபைல், ஆட்காம் நிறுவனத்தின் குறிப்பிட்ட மாதிரியை போன்றே உள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, ஆட்காம் என்றழைக்கப்படும், 'அட்வான்டேஜ் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சஞ்சீவ் பாட்டியா, நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பதை போல, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கும், எங்களது மொபைலை, 3,600 ரூபாய் விலையில் விற்பனை செய்துள்ளோம். ஆனால், எங்களுடைய மொபைலை, 251 ரூபாய் மொபைல் என, விற்றால், அந்தநிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எங்களுடைய மொபைல் போல, அவர்களுடைய மொபைலை வடிவமைத்தாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறிஉள்ளார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)