செலவை குறைக்க மாற்று யோசனை!செலவை குறைக்க மாற்று யோசனை! ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு ...
தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
07:37

புது­டில்லி : ‘‘மாசு பிரச்னை இல்­லாத, 30 தொழில்­க­ளுக்கு, சுற்­றுச்­சூழல் துறையின் ஒப்­புதல் தேவை­யில்லை,’’ என, மத்­திய சுற்­றுச்­சூழல் மற்றும் வனத்­துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ­டேகர் தெரி­வித்­துள்ளார்.
சுற்­றுச்­சூ­ழலை மாசு­ப­டுத்தும் தொழிற்­சா­லை­களை, வண்­ணங்­களின் அடிப்­ப­டையில் நான்கு வகை­யாகப் பிரித்து, அவற்­றுக்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களை, மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.
தரம் பிரிப்பதில் சிக்கல்பிரகாஷ் ஜாவ­டேகர் கூறி­ய­தா­வது: தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு அளவின் அடிப்­ப­டையில் அவற்றை தரம் பிரிப்­பதில், தற்­போது பல்­வேறு பிரச்­னைகள் உள்­ளன. அவற்­றுக்கு தீர்­வ­ளிக்கக் கூடிய புதிய திட்டம் தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது, குறிப்­பி­டத்­தக்க சிறப்பு வாய்ந்த திட்­ட­மாகும். இந்த திட்­டத்தின் அடிப்­ப­டையில், எந்­தெந்த தொழிற்­சா­லைகள் அதிக அளவில், மாசுவை வெளி­யி­டு­கின்­றன; எவை, குறை­வான அளவில் கழி­வு­களை வெளி­யேற்­று­கின்­றன என்­பதை சுல­ப­மாக அறிந்து கொள்­ளலாம்.அதற்­கேற்ப, அத்­தொழில் சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, சுற்­றுச்­சூழல் அனு­மதி அளிப்­பது குறித்து முடி­வெ­டுக்­கலாம். புதிய திட்­டத்தின் கீழ், மிக அதிக அளவில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் தொழில்­க­ளுக்கு, சிவப்பு வண்ணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதை­விட குறை­வான பாதிப்பை ஏற்­ப­டுத்தும் தொழில்­க­ளுக்கு, ஆரஞ்சு வண்­ணமும், மிகச் சிறிய அளவில் மாசுவை வெளிப்­ப­டுத்தும் தொழில்­க­ளுக்கு பச்சை வண்­ணமும் வழங்­கப்­படும்.
சுற்­றுச்­சூ­ழ­லுக்கு, 100 சத­வீதம், தீங்­கி­ழைக்­காத தொழில்­க­ளுக்கு, வெள்ளை நிறம் வழங்­கப்­படும். இதன் மூலம், அந்­தந்த தொழில்­களில் சுற்­றுச்­சூழல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்­ளலாம். இதன்­படி, அதிக அளவில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாசு ஏற்­ப­டுத்தும், சர்க்­கரை ஆலைகள், அனல் மின் நிலை­யங்கள், பெயின்ட் தொழிற்­சா­லைகள் உள்­ளிட்ட, 60 தொழில்­க­ளுக்கு, சிவப்பு வண்ணம் வழங்­கப்­படும். நிலக்­க­ரியில் உள்ள மாசுக்­களை அகற்­றுதல், வாக­னங்­களை கழு­வுதல் உள்­ளிட்ட தொழில்­களில், நீர் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வகை தொழிற்­சா­லை­க­ளுக்கு, ஆரஞ்சு வண்ணம் வழங்­கப்­படும். அடுத்து, அலு­மி­னியம் பாத்­தி­ரங்கள் தயா­ரிப்பு தொழிற்­சாலை, மாவு மில் போன்­ற­வற்­றுக்கு, பச்சை வண்ணம் அளிக்­கப்­படும்.
சுலபக் கடன் கிடைக்கும்:ஏர் கூலர், பருத்தி, கம்­பளி ஆடைகள் தயா­ரிப்பு உள்­ளிட்ட, 36 தொழில்கள், மிகக் குறைந்த அள­விற்கே, மாசுவை வெளி­யி­டு­கின்­றன. ஆகவே அத்­த­கைய தொழில்­க­ளுக்கு, வெள்ளை வண்ணம் வழங்­கப்­படும். இந்த வெள்ளை வண்ண தொழிற்­சா­லைகள், சுற்­றுச்­சூழல் அனு­மதி பெறத் தேவை­யில்லை. இதன் மூலம் இத்­தொ­ழிலில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, நிதி நிறு­வ­னங்கள் சுல­ப­மாக கடன் வழங்கும் சூழல் உரு­வாகும். அறி­வி­யல்­பூர்­வ­மாக ஆராய்ந்து, தயா­ரிக்­கப்­பட்ட இந்த புதிய நெறி­மு­றைகள், தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டு­மின்றி, சுற்­றுச்­சூழல் அமைச்­ச­கத்­திற்கும் தெளி­வான வழி­காட்­டு­தலை வழங்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)