பதிவு செய்த நாள்
07 மார்2016
15:05
புதுடில்லி : உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்களை சலுகை விலையாக ரூ.1099 க்கு வழங்க ஏர்ஏசியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2016ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து 2017ம் ஆண்டு மே 22ம் தேதி வரை பயணம் செய்பவர்கள் மார்ச் 7 ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த கட்டண சலுகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, விசாக்கப்பட்டினம், கவுகாத்தி, கொச்சி, இம்பால், கோவா, டில்லி ஆகிய நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான பயணிகளுக்கான ஆரம்ப டிக்கெட் விலை ரூ.1099 ஆகும். கோலாலம்பூரில் இருந்து கொச்சி, சென்னை அல்லது ஐதராபாத் நகரங்களுக்கு வரும் பயணிகளுக்கான ஆரம்ப கட்டண விலை ரூ.2999 ஆகும். இந்த கட்டண சலுகை ஏர்ஏசியா மற்றும் ஏர்ஏசியா எக்ஸ் விமானங்களுக்கு மட்டும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
பாங்காங்கில் இருந்து சென்னை மற்றும் பெங்களுருவுக்கு செல்லும் தாய் ஏர்ஏசியா விமானத்தில் கட்டண ஆரம்ப விலை ரூ.3999 ஆகும். மேலும் பல புதிய விமான பாதைகளிலும் செல்லும் விமானங்களிலும் இந்த சலுகை கட்டணம் வழங்கப்பட உள்ளதாக ஏர்ஏசியா குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|