பதிவு செய்த நாள்
07 மார்2016
16:04
புதுடில்லி : 2020ம் ஆண்டு மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் தங்களின் சுத்திரிகரிப்பின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹச்.பி.சி.எல்.,) முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.45,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த தொகையில் ரூ.21,000 கோடியை சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கும், ரூ.9000 கோடியை மார்க்கெட்டிங் உள்கட்டமைப்பிற்கும் ஒருக்க உள்ளது.
ஆண்டுக்கு 6.5 மில்லியன் டன் வரை எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட மும்பை சுத்திகரிப்பு ஆலையை 9.5 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக மாற்ற ரூ.4,199 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதே போல் ஆண்டுக்கு 8.3 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட விமாகப்பட்டினர் சுத்தகரிப்பு ஆலையை 15 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாற்றுவதற்கு ரூ.17,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|