பதிவு செய்த நாள்
08 மார்2016
06:57
மும்பை : மியான்மரில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, நான்கு வெளிநாட்டு வங்கிகளை துவக்க, அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மியான்மர் அரசு, அண்மையில், ‘முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவும் தேவையான நிதி ஒதுக்கப்படும்’ என, தெரிவித்திருந்தது. இதையடுத்து, வியட்நாம் பாங்க் பார் இன்வெஸ்ட்மென்ட் அண்டு டெவலப்மென்ட்; தைவானின் இ.சன் கமர்சியல் பாங்க், தென் கொரியாவின் ஷின்ஹான் பாங்க்; இந்தியாவின் எஸ்.பி.ஐ., ஆகிய வங்கிகளைத் துவக்க, அந்நாட்டு மத்திய வங்கி, முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. இதுகுறித்து, மியான்மர் மத்திய வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வங்கிகள் துவக்க, 12 மாத அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதற்குள், தங்களின் செயல் திட்டம் குறித்து, வங்கிகள் தெரிவிக்க வேண்டும். அதன் பின், இறுதி உரிமம் வழங்கப்படும்’ என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|