பதிவு செய்த நாள்
08 மார்2016
07:00
புதுடில்லி : இதுவரை, விற்பனையில் மட்டுமே குறியாக இருந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், இழப்பில் இருந்து இன்னும் லாப பாதைக்கு திரும்பாத காரணத்தால், இனி, நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிதானமாக நடைபோடுவது என, முடிவு செய்துள்ளன.
வலைதளங்கள் வாயிலாக, புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், சந்தைப் போட்டியால், வாடிக்கையாளர்களை கவர, ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வந்தன.குறிப்பாக, உணவுப் பொருட்கள், நகர்புற மக்களுக்கான ஆடம்பர சாதனங்கள் போன்றவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள், ரொக்கத் தள்ளுபடி உட்பட, பல்வேறு சலுகைகளை வழங்கின. அதனால் ஏற்பட்ட இழப்பையும் அவை தாங்கிக் கொண்டன. ‘விற்பனையை உயர்த்தினால், லாபம் தானாக கிடைக்கும்’ என, அவை போட்ட கணக்கு, எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.அதனால், அந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிதி நிறுவனங்கள், நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளன. அதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு, தயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘வர்த்தக செயல்பாடுகளை மேம்படுத்தி, உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; செலவுகளைக் குறைத்து, லாப பாதைக்கு திரும்ப வேண்டும்’ என, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, முதலீட்டாளர்கள், ‘செக்’ வைத்துள்ளனர். இந்தியாவில், வலைதளம் மூலம், பொருட்களை விற்பதில் முதலிடத்தில் உள்ள, ‘பிளிப்கார்ட்’ இன்னும் லாபம் காணாமல் உள்ளது. அதனால், அந்நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான மதிப்பை, மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு, 27 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து பிளிப்கார்ட், நீண்ட கால வளர்ச்சியை கருதி, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.
அதேசமயம், அடுத்த, ஓராண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்குள் லாபம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டில், புதிய தொழில்நுட்பத்தில் வர்த்தகத்தை துவக்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.அவை, ஏற்கனவே கையை சுட்டுக் கொண்ட நிறுவனங்களின் வரலாற்றை அறிந்துள்ளபடியால், மிகுந்த எச்சரிக்கையுடன், ‘விற்பனையுடன் சேர்ந்த வளர்ச்சி’ என்ற கொள்கையை கடைபிடிக்கின்றன.
தாக்கம்* கடந்த, 2015ல், முதலீட்டாளர்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், 500 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்* இந்நிறுவனங்களில், சர்வதேச நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்குவது, உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|