பதிவு செய்த நாள்
08 மார்2016
18:00
இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. நடப்பு பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், பட்ஜெட் உரையின் போது தொழிலாளர் வைப்பு நிதியில், பி.எப். கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பார்லிமென்ட்டில் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வட்டி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜெட்லி அறிவித்தார். ஜெட்லியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|