பதிவு செய்த நாள்
08 மார்2016
18:08
சென்னை : நகைகள் மீதான கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் நகைக்கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். ரூ.2 லட்சத்திற்கு மேல் நகைகள் வாங்கும் போது கண்டிப்பாக பான் கொடுப்பது அவசியம் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கே நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நகைகள் மீது கலால் வரி விதிக்கப்படுவதாக சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்தவாரம் தொடர் கடையடைப்பு போராட்டம் நாடு முழுவதும் நடந்தது. பின்னர் அந்த போராட்டம் ஞாயிறு அன்று வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நகைக்கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் ஜெயந்திலால் கூறியதாவது, பிரதமரை சந்தித்து வரி விதிப்பை ரத்து செய்யுமாறு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இன்று முதல் நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் தொடரும். நகைகளுக்கு கலால் வரியை ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|