பதிவு செய்த நாள்
09 மார்2016
07:11
மும்பை : மும்பை, தேசிய பங்கு சந்தைகளில், 21 குறு, சிறு நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 180 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன. பெரிய நிறுவனங்கள், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி வந்தன. இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், பங்கு வெளியிட்டு, நிதி திரட்டுவதற்காக, 2012ல் தனிப் பிரிவு துவங்கப்பட்டது. கடந்த, 2015-ல், 43 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பங்கு வெளியீடு மூலம், 327 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை, 21 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், 180 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளன. இதில், 13 நிறுவனங்கள், மும்பை பங்கு சந்தையிலும், எட்டு நிறுவனங்கள், தேசிய பங்கு சந்தையிலும், பங்குகளை வெளியிட உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|