பதிவு செய்த நாள்
09 மார்2016
07:15
புதுடில்லி : ‘உலகளவில், வேலைவாய்ப்புகளை வழங்குவதில், இந்தியா முதலிடம் வகிக்கும்’ என, மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வரும், ஏப்., – ஜூன் வரையிலான காலத்தில் வழங்க உள்ள வேலைவாய்ப்பு குறித்து, 41 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில், இதர நாடுகளை விட, இந்திய நிறுவனங்கள் தான், அதிகமானோரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருப்பது, தெரியவந்துள்ளது.
இது குறித்து, மேன்பவர் குரூப் நிறுவனத்தின், இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் ஏ.ஜி.ராவ் கூறியதாவது:இந்தியாவில், 5,203 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 38 சதவீத நிறுவனங்கள், அடுத்த மாதம் முதல், பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளதாகத் தெரிவித்து உள்ளன. இதில், தயாரிப்பு துறையில், 43 சதவீதம், சேவைகள் துறையில், 40 சதவீதம், சுரங்கம் மற்றும் கட்டுமான துறையில், 38 சதவீதம் பேர் என, வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க உள்ளன.பல்வேறு துறைகளில் அன்னிய முதலீடு அதிகரித்து வருவதை அடுத்து, இந்திய பொருளாதாரம், வேகமான வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்து உள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் தயாரிப்பு சார்ந்த தொழில்களை துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மத்திய அரசின், 2016 – 17ம் நிதியாண்டு பட்ஜெட், அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் பொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவற்றால், உலகளவில், ஆட்களை பணிக்கு சேர்ப்பதில், நிறுவனங்கள் நிதான போக்கை கடைபிடிக்கின்றன. அதற்கு நேர்மாறாக இந்தியா உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
எட்டு நாடுகளிலும்...ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த, எட்டு நாடுகளிலும், வரும் ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது, இந்தியா, ஜப்பான் நாடுகளில் மிக அதிகமாகவும், சீனா, ஆஸ்திரேலியாவில் மிகக் குறைவாகவும் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|