பதிவு செய்த நாள்
09 மார்2016
18:21
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. ஆனபோதும் வர்த்தம் முடியும் சமயத்திற்கு சற்று முன்பாக பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன. குறிப்பாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.73 புள்ளிகள் உயர்ந்து 24,793.96-ஆகவும், நிப்டி 46.50 புள்ளிகள் உயர்ந்து 7,531.80-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 10 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|