புதிய முத­லீ­டுகள்: மூன்­றா­வது இடத்தில் தமி­ழகம்புதிய முத­லீ­டுகள்: மூன்­றா­வது இடத்தில் தமி­ழகம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.13 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.13 ...
மலிவு விலை மருந்தை விற்­காதே! அமெ­ரிக்­காவின் ‘கெடு­பி­டி’க்கு அடி­ப­ணிந்த இந்­தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2016
07:37

மும்பை : சர்­வ­தேச மருந்து நிறு­வ­னங்கள், அவற்றின் விலை உயர்ந்த மருந்­து­களை இந்­தி­யாவில் விற்­ப­தற்­காக கொடுத்து வரும் நெருக்­க­டிக்கு, இந்­திய அரசு அடி­ப­ணிந்து விட்­ட­தாக அதிர்ச்சி தகவல் வெளி­யா­கி உள்ளது.
ஜெர்­ம­னியைச் சேர்ந்த பேயர் நிறு­வனம், கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ரக புற்­றுநோய் சிகிச்­சைக்கு, ‘சோரா­பெரிப்’ என்ற மூல மருந்தை தயா­ரித்து, அதை, ‘நெக்­சவேர்’ என்ற பிராண்டு பெயரில் விற்­பனை செய்து வரு­கி­றது. இதை வச­தி­ப­டைத்த நோயா­ளிகள் மட்­டுமே பயன்­ப­டுத்த முடியும். ஏனெனில், ஒரு மாத சிகிச்­சைக்­கான, 120 மாத்­தி­ரை­களின் விலை, 2.80 லட்சம் ரூபாய். அதனால், இந்­தி­யாவைச் சேர்ந்த நாட்கோ நிறு­வனம், ‘நெக்­சவேர்’ மூல மருந்து தயா­ரிக்கும் உரி­மைக்கு, ‘ராயல்டி’ தரு­வ­தாக, பேய­ரிடம் கூறி­யது.
அதை, பேயர் ஏற்க மறுத்­ததால், நாட்கோ, காப்­பு­ரிமை கட்டுப்­பாட்டு நீதி­மன்­றத்தில் முறை­யிட்டது. ஏழை மக்­க­ளுக்கு குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்­து கள் கிடைக்க, இந்­திய காப்­பு­ரிமை சட்ட திருத்தம் வகை செய்­கி­றது. அதன் அடிப்­ப­டையில், நாட்­கோ­வுக்கு, ‘கட்­டாய உரிமம்’ என்ற பிரிவின் கீழ், மூல மருந்து தயா­ரிக்க, காப்­பு­ரிமை கட்­டுப்­பாட்டு நீதி­மன்றம் அனு­மதி வழங்கி­யது. இதை­ய­டுத்து, நாட்கோ, ‘நெக்சவேர்’ மூல மருந்தில் தயா­ரிக்­கப்­பட்ட மாத்­தி­ரை­களை, பேயர் விற்ற விலையில், பத்தில் ஒரு பங்­கிற்கும் குறை­வாக, அதா­வது,8,880 ரூபாய்க்கு அறி­மு­கப்­படுத்தி­யது.
இது­போல, மேலும் பல நிறு­வ­னங்கள், குறைந்த விலையில், மூல மருந்­து­களை தயா­ரிக்கத் துவங்­கினால், விலை உயர்ந்த, தங்கள் மருந்­து­களை இந்­தி­யாவில் விற்க முடி­யாதே என, அமெ­ரிக்க, ஐரோப்­பிய மருந்து நிறு­வ­னங்கள் அஞ்­சு­கின்­றன. அதனால் அவை, ‘கட்­டாய உரி­மங்­களை மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்கக் கூடாது’ என, இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி கொடுக்கத் துவங்­கின. இதை­ய­டுத்து, ‘இந்­தியா, உள்­நாட்டு மருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மாக காப்­பு­ரிமை சட்­டங்­களை இயற்­றி­யுள்­ளது’ என, அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நி­திகள் கூட்­ட­மைப்பு, குற்றம் சாட்­டி­யுள்­ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு, இந்­தி­யாவின் நட­வ­டிக்­கை­களை முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் கண்­கா­ணிக்­கவும் முடிவு செய்­துள்­ளது. இத­னி­டையே, கடந்த மாதம், அமெ­ரிக்க – இந்­திய வர்த்­தக குழு, அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நி­தி கள் கூட்­ட­மைப்­பிடம் அறிக்கை ஒன்றை அளித்­தது.அதில், ‘உள்­நாட்டு மருந்து நிறு­வ­னங்கள் குறைந்த விலையில் மருந்­து­களை விற்­ப­தற்கு உதவும், காப்­பு­ரிமை சார்ந்த கட்­டாய உரி­மங்­களை இந்­தியா வழங்­காது’ என, மத்­திய அரசு, தனிப்­பட்ட முறையில், உறுதி அளித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு, வெளிப்­ப­டை­யாக கருத்து தெரி­விக்­க­வில்லை. எனினும், மத்­திய அரசு அவ்­வாறு கூறி­யி­ருந்தால், அது, உள்­நாட்டில், உயிர் காக்கும் மருந்­துகள் குறைந்த விலையில் கிடைப்­பதை தடுத்து விடும் என, மருந்து துறை சார்ந்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
முதன் முத­லாகஇந்­தி­யாவில், முதன் முத­லாக, 2012, மார்ச் 9ம் தேதி, அன்­னிய நிறு­வனம் ஒன்றின் மூல மருந்தை தயா­ரிப்­ப­தற்­கான ‘கட்­டாய உரிமம்’ உள்­நாட்டைச் சேர்ந்த, நாட்கோ நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)