பதிவு செய்த நாள்
11 மார்2016
00:02
புதுடில்லி : பிரபல, ‘ஆன்லைன்’ ஷாப்பிங் நிறுவனமான குயிக்கர், ‘குயிக்கர் டோர்ஸ்டெப்’ எனும் புதிய வசதியை, வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.குயிக்கர் நிறுவனம், பழைய பொருட்களை வாங்கி, விற்க வீடு தேடி வரும் குயிக்கர் டோர்ஸ்டெப் எனும் புதிய வசதியை, அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக மொபைல் போன், வீட்டு சாதனங்கள் மற்றும் பர்னிச்சர் போன்றவற்றை மட்டும் வியாபாரம் செய்ய இருக்கிறது. பொருட்களின் விலையை மதிப்பிடுவது, பேரம் பேசுவது போன்றவற்றை சமாளிப்பதற்காக, சுமார் ஆறு மாதங்களாக சோதனை ஓட்டங்களை நடத்தி, இப்போது இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. முதற்கட்டமாக, இந்தியாவில் கிட்டத்தட்ட, 25 நகரங்களில் இந்த டோர்ஸ்டெப் வசதியை அறிமுகப்படுத்துகிறது குயிக்கர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|