பதிவு செய்த நாள்
11 மார்2016
00:08
ஆமதாபாத் : ஜி.பி.எஸ்., மற்றும் ‘வைபை’ வசதியுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ ஆட்டோக்களை, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஆட்டோ நிறுவனம், தயாரிக்கிறது. புதுடில்லியில், சமீபத்தில் நடைபெற்ற, ‘ஆட்டோ எக்ஸ்போ 2016’ கண்காட்சியில், இந்த ஆட்டோ இடம் பெற்றது. பல தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இந்த, ‘ஸ்மார்ட்’ ஆட்டோக்கள், விரைவில் சாலையில் வலம் வரும் என தெரிகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் நிரஜ் சந்திரா கூறுகையில், ‘‘இந்திய மூன்றுசக்கர வாகன சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு, ஏழு, சதவீதமாக உள்ளது. விற்பனையை அதிகப்படுத்தும் நோக்குடன், சர்வதேச தரத்தில், ஜி.பி.எஸ்., மற்றும் ‘வைபை’ வசதியுடன் கூடிய ஆட்டோக்களை தயாரிக்க உள்ளோம். மேலும் எங்களது உற்பத்தியை அதிகரிப்பதற்காக, ஆமதாபாத்தில், புதிய தொழிற்சாலை நிறுவப்படுகிறது,’’ என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|