பதிவு செய்த நாள்
11 மார்2016
10:02
மும்பை : நேற்று சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( மார்ச் 11, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 32.27 புள்ளிகள் உயர்ந்து 24,655.61 புள்ளிகளாகவும், நிப்டி 8.50 புள்ளிகள் உயர்ந்து 7494.65 புள்ளிகளாகவும் உள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டல்கோ இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, லார்சன் அண்ட் டர்போ, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் அடைந்துள்ளன. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, எம் அண்ட் எம், எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல சீரடைந்து வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|