பதிவு செய்த நாள்
11 மார்2016
15:47
புதுடில்லி : ஆன்லைன் வர்த்தகத்தை 3 பரிமாணங்களின் கீழ் விரிவுபடுத்த தேசிய பங்குச் சந்தையான் என்எஸ்இ முடிவு செய்துள்ளது. இதன்படி, மார்ச் 14 முதல் நிப்டி தனியார் வங்கி, நிப்டி குவாலிட்டி 30, நிப்டி மிட்கேப் லிக்யூட் 15 என்ற 3 திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டங்களின் கீழ் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக என்எஸ்சி தெரிவித்துள்ளது. நிப்டி தனியார் வங்கியின் கீழ் 10 பெரிய தனியார்த்துறை வங்கிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதே போன்று நிப்டி குவாலிட்டி 30 திட்டத்தின் கீழ் டாப் 30 நிறுவனங்களும், நிப்டி மிட்கேப் லிக்யூட் 15 திட்டத்தின் கீழ் லிக்யூட் கம்பெனிகளும் கொண்டு வரப்பட உள்ளன.
நிப்டி மிட்கேப் லிக்யூட் 15 திட்டம், பின்னர் நிப்டி மிட்கேப் 50 ஆக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நிறுவனங்களை ஈர்த்து, அவற்றுடன் வர்த்கதக உறவை ஏற்படுத்துவதற்காகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சீரமைத்து, விரிவுபடுத்துவதற்கும் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|