பதிவு செய்த நாள்
11 மார்2016
16:18
மும்பை :ரியல் எஸ்டேட் மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டதால், கட்டுமான துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், ஏற்றத்துடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 94.65 புள்ளிகள் உயர்ந்து 24717.99 புள்ளிகளாகவும், நிப்டி 24.05 புள்ளிகள் அதிகரித்து 7510.20 புள்ளிகளாகவும் இருந்தன.
1098 பங்குகள் ஏற்றத்துடனும், 1467 பங்குகள் சரிவுடனும், 154 பங்குகள் எவ்வித மாற்றம் இன்றியும் காணப்பட்டன. லுபின், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, பிஹச்இஎல், டாடா ஸ்டீல், என்டிபிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
2020ம் ஆண்டு இந்திய ஐடி துறையில் வலுவானதொரு நிலைத்தன்மை காணப்படும் என உலக பொருளாதார கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஐடி துறை பங்குகளின் மதிப்பு உயர்வை கண்டன. பங்குச் சந்தைகளின் ஏற்றமான நிலைக்கு இது முக்கிய காரணமாக கருதப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|