பதிவு செய்த நாள்
12 மார்2016
02:22
பனாஜி:இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்புகளின் ஒன்றியமான அசோசம், வருகிற, 29-ம் தேதி, கோவாவில், ‘டிபன்ஸ் எக்ஸ்போ’வை முன்னிட்டு, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் துவக்கி வைக்கிறார். இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அசோசம் அமைப்பின் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் தேசிய கவுன்சிலின் தலைவரான மாங்யூரிஷ் பாய் ராய்கர், ‘‘பல நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். பாதுகாப்பு துறையில், பிற நாட்டின் கூட்டு முயற்சியோடு, பல பொருட்களை தயாரிக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும். ‘மேக் இன் இந்தியா’வுக்கு இது மேலும் வலு சேர்ப்பதோடு, தனிப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணை சேர்ப்பதாக இருக்கும். நாடு முழுவதிலும் உள்ள தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|