பதிவு செய்த நாள்
13 மார்2016
07:46
புதுடில்லி : இழந்த தன்னுடைய மார்க்கெட்டை, மீண்டும் எப்படியாவது மீட்டுவிடுவது என்ற வேகத்தில் இருக்கிறது, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம். அதன் ஒருகட்டமாக, தன் பிரபல தயாரிப்பான மேகி நுாடுல்ஸை, வேறு விதங்களில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. நுாடுல்ஸ் வகைகளில் மட்டுமின்றி, காபி, சாக்லேட், பால் போன்றவற்றிலும், புதிய தயாரிப்புகளை களம் இறக்க இருக்கிறது நெஸ்லே நிறுவனம்.மேகி நுாடுல்ஸ் தடை செய்யப்படுவதற்கு முன், 30 லட்சத்து, 80 ஆயிரம் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது; தடையின்போது, 5 லட்சமாகி விட்டது. தற்போது, 10 லட்சத்து, 40 ஆயிரம் என்ற அளவுக்கு மீட்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இந்நிறுவன தலைவர் சுரேஷ் நாராயணன் கூறுகையில், ‘‘ஒரு பிராண்ட், தன் வாடிக்கையாளர்களுடன் எப்படிப்பட்ட தொடர்பை வைத்திருக்கிறது என்பதை இறுதியில் வெளிப்படும் வெற்றிதான் உணர்த்தும். விரைவில் பழைய நிலையை அடைவோம்,’’ என்றார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|