பதிவு செய்த நாள்
14 மார்2016
00:47
என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக, மத்திய பட்ஜெட்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு மேலும் ஈர்ப்புடையாதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய பட்ஜெட்டில் வருங்கால வைப்பு நிதியான பி.எப்.,பிற்கு வரிவிதிக்க உத்தேசிக்கப்பட்டு இருந்ததை, பரவலான எதிர்ப்பை அடுத்து திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., தொடர்பான மாற்றம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு வரை என்.பி.எஸ்., திட்டத்தில் தானாக இணைபவர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு, 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட இந்த நிலை தான். இதற்கு காரணம் என்.பி.எஸ்., தொகையை எடுக்கும் போது அதற்கு வரி விதிப்பு இருப்பது தான்.எனினும், பட்ஜெட்டில், 40 சதவீத தொகைக்கு வரி விதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்த தொகையில், 40 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கான, ‘ஆன்யுவிட்டு’ திட்டங்களில் முதலீடு செய்தது போக மீதி தொகையை எடுக்கும் போது, 20 சதவீத தொகை மட்டுமே வரி விதிப்பு இலக்காகும். இதனால் இந்த திட்டம் மீதான ஈர்ப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|