நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும்நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும் ... ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணத்தின் இதயம் எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:49

பணம் சம்­பா­திக்க மற்றும் சம்­பா­தித்த பணத்தை சிறப்­பாக நிர்­வ­கிக்க வழி­காட்டும் புத்­த­கங்­களில் இருந்து கொஞ்சம் மாறு­பட்டு, பணத்­து­ட­னான நம் உறவை புரிந்து கொள்ள உதவும் புத்­த­கங்­களில் ஒன்­றாக, லைனே டிவிஸ்ட் எழு­தி­யுள்ள, ‘தி சோல் ஆப் மணி’ அமைந்­துள்­ளது.‘‘வாழ்க்­கையில் நீங்கள் முக்­கி­ய­மாக நினைக்கும் மதிப்பு எவை என்­பதை கண்­ட­றிந்து, அவற்­றுடன் பணத்தை தொடர்­பு­ப­டுத்திக் கொள்­ளுங்கள்,’’ என்­கிறார் லைனே டிவிஸ்ட்.
* பெரும்­பா­லானோர் தங்கள் நிதி வாழ்க்­கை­யையும், தாங்கள் முக்­கி­ய­மாக கருதும் மதிப்­புகள் சார்ந்த ஆன்­மாவை மைய­மாக கொண்ட வாழ்க்­கை­யையும் தனித்­த­னியே பார்க்­கின்­றனர். இந்த இரண்டு உல­கிலும் அவர்கள் மாறு­பட்ட வகையில் நடந்து கொள்­கின்­றனர். நிதி வாழ்க்­கையில் பொறா­மையும் சுய­ந­லமும் மேலோங்­கு­கி­றது என்றால், ஆன்­மாவை மைய­மாக கொண்ட வாழ்க்­கையில், மற்­ற­வர்­களை முக்­கி­ய­மாக கரு­து­கின்­றனர். இந்த இரட்டை நிலை தேவை­யில்­லா­தது * பணம் மட்­டுமே நிறை­வான வாழ்க்­கையை அளிப்­ப­தில்லை. பணம் இல்­லாமல் இருப்­பதால் வாழ்க்கை வெறு­மை­யாகி விடு­வதும் இல்லை. எனவே, பணத்தை நிறை­வுடன் தொடர்­பு­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­ய­தில்லை. நீங்கள் பணக்­கா­ர­ராக இருந்­தாலும் சரி ஏழை­யாக இருந்­தாலும் சரி, உங்கள் மதிப்­பீ­டுகள் சார்ந்து வாழ்­வது சாத்­தியம்* பலரும் எதுவும் போது­மா­ன­தல்ல எனும் உணர்வை கொண்­டி­ருக்­கின்­றனர். அதனால் தான் மேலும் மேலும் பொருட்­களை பெற துடிக்­கின்­றனர். பற்­றாக்­குறை மன­நிலை தேவை­யில்லை * போதும் என்­ப­தற்கும், அள­வற்ற தன்­மைக்­கு­மான வேறு­பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அள­வற்­றத்­தன்மை பெற விரும்­பு­கின்­றனர். மாறாக, போதும் என்ற உணர்வை கொண்­டி­ருப்­பது நல்­லது. இதன் மூலம், பணம் சம்­பா­திக்கும் நேரம் போக, மிச்­ச­முள்ள நேரத்தை நமக்கு முக்­கி­ய­மான விஷ­யங்­களில் செல­வி­டலாம் * எல்­லா­ருமே தங்கள் நிகர மதிப்பை அதி­க­மாக்­கு­வதில் கவனம் செலுத்­து­கின்­றனர். ஒவ்­வொரு மாதமும், நிதி­நி­லையை மேம்­படுத்திக் கொள்­வதில் அக்­கறை காட்­டு­கின்றனர். ஆனால், திருப்­தி­ய­ளிக்க கூடிய நிகர மதிப்பை அடைந்­த­துமே, அதை மறந்து­விட்டு, வாழ்க்­கையின் அர்த்­த­முள்ள விஷ­யங்­களில் ஈடு­ப­டலாம்* முத­லீடு செய்யும் பணம் எப்­படி வளர்­கி­றதோ, அதே போல நீங்கள் மதிப்பு வைத்­தி­ருக்கும் விஷ­யங்­களில் அதிக கவனம் செலுத்­தினால், அதன் மதிப்பும் அதி­க­மாகும். எனவே ஒவ்­வொரு வாரமும், நீங்கள் நேரத்தை எதற்­காக செல­வி­டு­கி­றீர்கள் என கவ­னித்து, வாழ்க்­கையின் மற்ற விஷ­யங்­க­ளிலும் ஈடு­பாடு காட்­டவும் * பொரு­ளா­தார விஷயம் சார்ந்த கனவு இருப்­பது போல, சமூக வாழ்க்கை சார்ந்த கனவும் இருக்க வேண்டும். அத்­த­கைய கனவை கண்­ட­றிந்து அதை உண்­மை­யாக்கும் வகையில் செயல்­ப­டுங்கள். அந்த கனவை புரிந்து கொண்டு உரை­யாடல் மூலம் அதை முன்­னோக்கி கொண்டு செல்­லுங்கள். இப்­படி செய்­வதன் மூலம் உங்­க­ளுக்­கான அடிச்­சு­வட்டை ஆழ பதிய வைக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)