பதிவு செய்த நாள்
14 மார்2016
00:54
ஹங்கேரி : இந்தியாவின் இரண்டாவது பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமான அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துக்கு, தொழில் திறன் கொண்ட ஊழியர்கள் கிடைக்காததால், சிக்கல் எழுந்துள்ளது.அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், கிழக்கு ஹங்கேரி நாட்டில், 500 மில்லியன் யூரோ மதிப்புடைய தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது. ஆனால், இந்த தொழிற்சாலைக்கு தேவையான திறன் மிக்க ஊழியர்கள் கிடைப்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘‘ஹங்கேரி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு முக்கியமான காரணம், குறைவான சம்பளத்தில் ஊழியர்கள் கிடைப்பது தான். ஆனால், வேறு ஐரோப்பிய நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதால் திறன் மிகுந்தவர்கள் அந்த நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். அதனால் சொற்ப எண்ணிக்கையிலேயே திறன் படைத்த ஊழியர்கள் ஹங்கேரியில் இருக்கின்றனர்,” என்றார், ஹங்கேரி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை தலைவர் திபோர் பான்யாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|