பதிவு செய்த நாள்
14 மார்2016
00:57
புதுடில்லி : ‘போக்ஸ்வேகன்’ இந்தியா நிறுவனம், தன் கார்களை திருப்பி பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், மாசு வெளியேற்றம் குறித்த சர்ச்சையில் அண்மையில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, தன் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, 1 லட்சத்து 80 ஆயிரம் கார்களை திருப்பி பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு இந்நிறுவனம் வந்திருக்கிறது.இது குறித்து போக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் மேயர் கூறியதாவது: உலக அளவில் கார்களை நாங்கள் திரும்பப் பெற உள்ளோம். முதலில் ஐரோப்பாவில் ஆரம்பிக்க உள்ளோம். அடிப்படையில் இது ஒரு சாப்ட்வேர் அப்டேட்தான். சாப்ட்வேர் தயாராகி இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தவுடன், இங்கே கார்களை திரும்பப் பெற்று அப்டேட் செய்து தருவோம். எங்களைப் பொறுத்தவரை எல்லா நாடுகளையும் நாங்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|