பதிவு செய்த நாள்
14 மார்2016
00:58
பெங்களூரு : ஆன்லைன் வணிக தளமான பிளிப்கார்ட் நிறுவனம், தன் ஊழியர்களுக்காக பிளிப்ஸ்கூல் ஒன்றை துவக்க உள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம், தன் ஊழியர்களுக்கு விரைவாக எதையும் கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்க, பிளிப்ஸ்கூல் எனும் கார்ப்பரேட் பல்கலைக் கழகம் ஒன்றை துவக்குகிறது. இது, வழக்கமாக எல்லா இடங்களிலும் வழங்கப்படும் டிரெயினிங் போல இல்லாமல், மாறுபட்டு இருக்கும். முதற்கட்டமாக, தன்னுடைய, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, இந்த கல்வியை வழங்கும் பிளிப்கார்ட், பின் பிறருக்கும் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இ – காமர்ஸ் துறைக்கும், வினியோக அமைப்புக்கும் இருக்கும் இடைவெளியை போக்கவும், தகுதியான நபர்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களைப் போக்கவும், இது உதவும் என்கிறது பிளிப்கார்ட்.இந்நிறுவனம், ஏற்கனவே தன் ஊழியர்களுக்காக, பிளிப்லேர்ன் எனும் எலக்ட்ரானிக் கல்வி தொகுப்பை உருவாக்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|