பதிவு செய்த நாள்
14 மார்2016
23:34
புதுடில்லி : மகிந்திரா குழுமம், விவசாயத்துக்கு தேவையான சாதனங்களை வாடகைக்கு விடும் களத்தில் இறங்கி உள்ளது. இதற்காக, ‘டிரிங்கோ’ எனும் முறைப்படுத்தப்பட்ட வாடகை சேவையையும் ஏற்படுத்தி இருக்கிறது.மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது, விவசாய உபகரண துறை. இது டிரிங்கோ மூலமாக பிரான்ச்சைஸ் அமைத்து, டிராக்டர்களை வாடகைக்கு விட இருக்கிறது. இந்த சேவையில் டிரிங்கோ, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும். இதுகுறித்து மகிந்திரா அண்ட் மகிந்திராவின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கூறியதாவது: விவசாயிகள் இயந்திரங்களில் முதலீடு செய்ய தேவையிருக்காது. வாடைக்கு எடுத்து எவ்வளவு உபயோகிக்கின்றனரோ அவ்வளவுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் அவர்கள் தங்களது லாபத்தை அதிகரித்து கொள்வதுடன், டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்தும் வாய்ப்பையும் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|