பதிவு செய்த நாள்
14 மார்2016
23:38
புதுடில்லி : பிரான்ஸ் நாட்டு டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்செலின், ஸ்நாப்டீலுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ மூலமாக டயர் விற்பனையில் ஈடுபட உள்ளது.
இ – காமர்ஸ் மூலமாகவும், தன் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக, மிச்செலின் நிறுவனம், ஸ்நாப்டீலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம், மிச்செலின் இந்தியா நிறுவனத்தின் வியாபார பிரிவு இயக்குனர் மோகன் குமார் கூறியதாவது: ஸ்நாப்டீல், மிகப்பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இந்த புதிய வாய்ப்பு ஏற்கனவே, எங்களுக்கு இருக்கும் வினியோக மையங்கள், டீலர்களுக்கு விற்பனையை அதிகரிக்க கைகொடுக்கும் என்று நம்புகிறோம். ஆன்லைனில் டயர்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, டீலர்களிடம் டயர்களை பெற்றுக் கொள்ளலாம். என்ன நேரத்தில் எங்கு பெற்றுக் கொள்வது என்பதை எல்லாம், முன்கூட்டியே முடிவு செய்துவிட முடியும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு வீண் அலைச்சலோ, சிரமமோ இனி இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|