பதிவு செய்த நாள்
16 மார்2016
07:31
புவனேஸ்வர் : இந்திய விவசாயம் ஆண்டுக்கு, 5 சதவீத வளர்ச்சியை பெறக் கூடிய அளவுக்கு சாத்தியம் இருப்பதாகவும், தற்போது அதுவே, 3.6 சதவீதத்திலிருந்து, 4 சதவீதம் வரை இருப்பதாகவும், பிரபல விவசாய ஆராய்ச்சியாளர் டாக்டர் அசோக் குலாட்டி தெரிவித்தார். புவனேஸ்வரில் நடந்த, ஒடிசா நாலெட்ஜ் ஹப்பில் பங்கேற்று, டாக்டர் அசோக் குலாட்டி பேசும்போது, ‘‘நாட்டின் பொருளாதாரத்தை பிரமிட் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், விவசாயத் துறை அதன் அடித்தளமாகவும், மத்தியில் தயாரிப்புத் துறையும், அதற்கு மேலே சேவைத் துறையும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையை அணுகினால் நிச்சயமாக தொடர்ச்சியான அபிவிருத்தியை இந்தியா எட்டலாம்,” என்றார்.மேலும், “விவசாயம் என்பது மாநிலம் சம்பந்தப்பட்டது என்றாலும் கூட, மத்திய அரசும் அதன் வளர்ச்சிக்கான துாண்டுதலுக்கு, உரிய விஷயங்களில் கவனம் எடுக்க வேண்டும்,” என குலாட்டி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|