பதிவு செய்த நாள்
16 மார்2016
07:32
மும்பை : இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி நிறுவனத்துடன் இணைந்து, புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கார்டு இரண்டு நிறுவனங்களின் பிராண்டுகளும் இணைந்த கோ – பிராண்ட் கிரெடிட் கார்டு ஆகும்.ஐ.சி.ஐ.சி.ஐ., பெராரி இணைந்து வழங்கும் இந்த பெராரி கிரெடிட் கார்டு, விசா கார்ட் தளத்தில் இயங்கும். இதில் இரண்டு வகையான கார்டுகள் இருக்கின்றன. இந்த புதிய கார்டுக்கான அறிமுகச் சலுகையாக, கார்டு வாங்குபவர்களுக்கு ஸ்கூடெரியா பெராரி வாட்ச் அன்பளிப்பாக வழங்கப்படும். மேலும், அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இத்தாலி டூர் செல்ல வாய்ப்பும் தருகிறது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பொது மேலாளர் குஷால் ராய், “இந்தியாவில் இதுதான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் பெராரி கார்டு ஆகும்,” என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|