பதிவு செய்த நாள்
17 மார்2016
00:56
புதுடில்லி : பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையில் முன்னணியில் இருந்த லெனோவா இந்தியா நிறுவனம், இப்போது தன் கவனத்தை, ஸ்மார்ட்போன் பக்கம் திருப்பி உள்ளது.சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம், இந்தியாவில் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை விற்று, சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று வந்தது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் மார்க்கெட் அதிகரிக்கவும், அதில் தன் கவனத்தை திருப்பியது இந்நிறுவனம். இதையடுத்து, தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றைவிட, அதிகமாக ஸ்மார்ட்போனை விற்று வருகிறது. ஸ்மார்ட் போன் சந்தையில், லெனோவா 11.6 சதவீதத்தை தன்னிடம் வைத்திருக்கிறது.இதுகுறித்து பேசிய இந்நிறுவனத்தின் மொபைல் பிசினஸ் குழும இயக்குனர் சுதின் மாத்துார், “இப்போது ஸ்மார்ட்போன் பிசினஸ் என்பது எங்களுடைய தவிர்க்க முடியாத, முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. ஏற்கனவே, எங்களுக்கு கம்ப்யூட்டர் விற்பனையின் அளவைவிட மொபைல் போன் விற்பனை அதிகமாகிவிட்டது,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|