பதிவு செய்த நாள்
17 மார்2016
00:59
ஐதராபாத் : விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றைத் தயாரிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான, ‘டெக்ஸ்ட்ரான்’ நிறுவனம் இந்தியாவில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களை பரிசீலித்து வருகிறது.‘பெல் 407’ என்ற பிரிவைச் சேர்ந்த ஹெலிகாப்டரை, இந்தியாவிலேயே தயாரிக்கும் எண்ணத்தில், அதற்கான இடத்தை பரிசீலித்து வருகிறது, டெக்ஸ்ட்ரான் நிறுவனம்.ஏற்கனவே இந்நிறுவனம், பெங்களூரில் ஒரு வளர்ச்சி மையத்தை அமைத்து, அதில் சுமார், 500 ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்கிறது.இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் இந்திரஜித் சியால், ‘‘மாநில அரசுகளிடம் பேசி வருகிறோம். எங்கு முழுமையான ஆதரவு கிடைக்கிறதோ அதை பரிசீலிப்போம். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முயற்சிக்கிறோம்” என, தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|