பதிவு செய்த நாள்
17 மார்2016
01:00
மும்பை : வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும், ‘இன்பிபீம் இன்கார்ப்பரேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 21ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிவடைகிறது. பங்கு ஒன்றின் விலை, 360 – 432 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிய, விஷால் மேத்தா, 2007ல், இந்தியா திரும்பி, இன்பிபீம் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தை, தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், வலைதளம் வாயிலாக, ஆடைகள், புத்தகங்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனைக்கு ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம், இன்பிபீம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|