பதிவு செய்த நாள்
17 மார்2016
01:03
ஐதராபாத் : “பொருளாதார வளர்ச்சிக்கு, விமான போக்குவரத்து துறை உதவுவதாக இருக்குமே தவிர, அது பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்காது” என்று, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் நடைபெற்ற ‘இண்டியா ஏவியேஷன் – 2016’ என்ற அமர்வில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராஜு பேசியதாவது: விமான போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமே தவிர, உறுத்தலாக இருக்காது. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த, அரசு முயற்சித்து வருகிறது. ‘மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா’ என பல திட்டங்களை அரசு வகுத்து வழங்குகிறது. அவற்றை நோக்கி நாம் விரைய வேண்டிய சமயம் இது. ஏனென்றால், இந்தியா தான் உலகின் பல நாடுகளுக்கு, திறன்களை அளித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|