பதிவு செய்த நாள்
17 மார்2016
01:05
புதுடில்லி : மத்திய அரசு கடந்த, 12ம் தேதி, ‘பிக்சட் டோஸ் காம்பினேஷன்ஸ்’ எனப்படும், உடலுக்கு ஊறு விளைவிக்கும், கலப்பு வகையைச் சேர்ந்த, 344 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்தது. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவால், மருந்து துறைக்கு, உடனடியாக, 800 – 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ‘சிப்லா, எம்க்யூர், மேன்கைண்ட், சுவென்டஸ்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்காமல், திருப்பி அனுப்புமாறு, மொத்த விற்பனையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன. அதேசமயம், ‘பைஸர், மெக்லாட்ஸ், கிளன்மார்க்’ உள்ளிட்ட சில மருந்து நிறுவனங்கள், கோர்ட்டுக்குச் சென்று, வரும், 21ம் தேதி வரை, அரசாணைக்கு தடை உத்தரவைப் பெற்றுள்ளன. ‘போதுமான கால அவகாசம் அளிக்காமல், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, நோயாளிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது’ என, மருந்து விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ‘பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துகளால், மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கை சரியே’ என, ஒருசாரார் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், ‘1988ம் ஆண்டுக்கு முன், ‘தீங்கற்றது’ என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அங்கீகரித்த பல மருந்துகளுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆச்சரியம் அளிக்கிறது’ என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருந்து நிறுவனங்கள், நான்கு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை, மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்தியாவில், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மொத்த விற்பனையாளர்கள் மூலம், எட்டு லட்சத்திற்கும் அதிகமான, சில்லரை விற்பனையாளர்களுக்கு, மருந்து வினியோகம் செய்யப்படுகிறது. அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை, நிறுவனங்கள் திரும்பப் பெற்று வருகின்றன.
மூக்கடைப்பை போக்கும், ‘விக்ஸ் ஆக் ஷன் – 500’ மற்றும் இருமல், சளி தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும், ‘கோரக்ஸ்’ உட்பட, 344 மருந்துகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|