பதிவு செய்த நாள்
17 மார்2016
12:05
புதுடில்லி:'ஆல்கஹால்' கலந்திருப்பதாகக் கூறி, 'கோரக்ஸ், பெனட்ரில்' போன்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் செல்கின்றனர்.பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், 'ஆல்கஹால்' கலந்துள்ள, 'கோரக்ஸ், பெனட்ரில், விக்ஸ் ஆக் ஷன் - 500' உட்பட, 344 மருந்துப் பொருட்களுக்கு தடை விதித்து, சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், பெரும்பாலான மருந்தகங்களின், 'ஷோகேஸ்'களில் இந்த மருந்துகள் இடம்பெறவில்லை. 'இனிமேல், இருமல் வந்தால், என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்களிடம் கேட்க வேண்டியுள்ளது. மக்களும், தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் செல்ல துவங்கியுள்ளனர். பக்கவிளைவுகளை தராத, 'ஆல்கஹால்' கலக்காத, டாபர், பதஞ்சலி, ஹிமாலயா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான மூலிகை மருந்துகள், இப்போது மருந்தகங்களின் பெட்டிகளில் நிரம்பியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|