தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லைதங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ... வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல் வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
13:37

புதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பருப்பு விலைகளின் உயர அரசு அனுமதிக்காது எனவும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், 2015ம் ஆண்டு தேவைக்கு ஏற்றவாறு பருப்பு உற்பத்தி செய்யப்படவில்லை. சுமார் 170 லட்சம் டன் பருப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றில் 45 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனால் பருப்பு வகைகளின் தேவை 215 லட்சம் டன்களாக அதிகரித்தது. இதனால் பருப்பு தேவையை சமாளிக்க இந்த ஆண்டு 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருந்து மார்ச் 1ம் தேதி வரை 55.5 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2015-16 வேளாண் உற்பத்தி ஆண்டில் பருப்பு உற்பத்தி 17.33 மில்லியன் டன்னாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. பருப்பு விலையை உயர்வை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது. ஒருவேளை உயர்ந்தால், அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பருப்பு பதுக்கல் எங்கும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரூ.220 வரை உயர்ந்திருந்த ஒரு கிலோ பருப்பின் விலை, தற்போது அரசின் தொடர் நடவடிக்கையால் ரூ.150 முதல் 160 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்றார்.
பருப்பை தவிர அரிசி, சர்க்கரை என வேறு எந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரவில்லை. தக்காளி, வெங்காயம் விலை மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)