பதிவு செய்த நாள்
18 மார்2016
06:01
புதுடில்லி : ‘பஜாஜ் அலையன்ஸ்’ நிறுவனம், நடப்பு நிதியாண்டில், புதிய வணிகம் மூலம், 3,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், புதிய வணிகம் மூலம், 3,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் சந்தை பிரிவு தலைமை அதிகாரி சுப்ராத் மொகந்தி கூறியதாவது:நிறுவனத்திற்கு, 2015 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், காப்பீடுகள் மூலம், 1,672 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 6 சதவீதம் அதிகம் ஆகும். சில ஆண்டுகளாக, தனி நபர் காப்பீட்டில், நிறுவனத்தின் பங்கு, 50 சதவீதமாக இருந்தது; தற்போது, 32 சதவீதமாக உள்ளது. இது நடப்பு நிதி முடிவதற்குள், 50 சதவீதமாக உயர்த்தப்படும். இதே காலத்தில், புதிய வணிகம் மூலம், 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|