பதிவு செய்த நாள்
18 மார்2016
06:11
புதுடில்லி : இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கு, பொது வரி விதிப்பு திட்டத்தின் கீழ், 20 சதவீதம் வரி சலுகையை, ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த சலுகை, இந்தாண்டு டிசம்பர் இறுதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இந்திய ஆயத்த ஆடைகளின் இறக்குமதிக்கான வரி சலுகை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு நீட்டித்துள்ளது. ‘இதன்படி, வரும், 2019ம் ஆண்டு வரை, இந்திய ஆயத்த ஆடைகளின் இறக்குமதிக்கு, ஐரோப்பிய நாடுகள் வரி சலுகை வழங்கும்’ என, ஆடைகள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் தெரிவித்து உள்ளது. பொது வரி விதிப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால், இந்திய ஜவுளி துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பின் அறிவிப்பு உள்ளது என, இக்கழகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|