பதிவு செய்த நாள்
19 மார்2016
04:45
புதுடில்லி:சீனாவின் மலிவு விலை உருக்கு பொருட்களால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசு, இறக்குமதியாகும் உருக்கு பொருட்களுக்கு, 20 சதவீதம், பாதுகாப்பு வரி விதித்துள்ளது.
இருந்தபோதிலும், சர்வதேச சந்தை யில் உருக்கு விலை சரிவடைந்ததால், சீனா, ஒரு டன் உருக்கு பொருட்களை, 300 – 350 டாலர் விலையில், இந்தியாவில் குவிக்கத் துவங்கியது. இதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, 173 உருக்கு பொருட்களுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையை, கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது.
இதன்படி, இறக்குமதியாகும் ஒரு டன் உருக்கு பொருட்களுக்கு, 341 டாலர் முதல், 752 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. இத்தொகைக்கு குறைவாக, உருக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில், உருக்கு விலை, மளமளவென சரிந்து, ஒரு டன், 150 டாலராக குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், குறைந்தபட்ச இறக்குமதி வரி விதிப்பிற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய உருக்கு கம்பி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில்,‘உருக்கு மூலப் பொருட்களின் இறக்குமதி செலவு உயர்ந்துள்ளதால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச இறக்குமதி விலை, மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், மத்திய அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து, ஏப்ரல் 5ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள உருக்கு பொருட்களின் குறைந்தபட்ச இறக்குமதி விலை, சர்வதேச விலையை விட, இரு மடங்கு அதிகமாக உள்ளதால், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்திக்கான செலவினம் அதிகரித்துள்ளதுஇந்திய உருக்கு கம்பி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|