பதிவு செய்த நாள்
19 மார்2016
04:49
புதுடில்லி:ஏர்பஸ் நிறுவனம், டில்லியில், 260 கோடி ரூபாய் செலவில், விமானிகள் பயிற்சி மையத்தை துவக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், ஏர்பஸ் விமான நிறுவனத்தின், 210 விமானங்கள் விமான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில், அடுத்த, 20 ஆண்டுகளில், ஏர்பஸ் நிறுவனத்தின், 1,600 விமானங்கள் இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், திறமை வாய்ந்த விமானிகள் மற்றும் பராமரிப்பு பொறியாளர்கள், அந்நிறுவனத்திற்கு தேவைப்படுகின்றனர். இதற்காக, டில்லியில், 260 கோடி ரூபாய் செலவில் பயிற்சி மையத்தை அமைக்க, ஏர்பஸ் முடிவு செய்துள்ளது. இந்த மையம், 2017ல் செயல்பாட்டுக்கு வரும்.
இதில், 8,000 விமானிகள், 2,000 பராமரிப்பு பொறியாளர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஏர்பஸ் நிறுவனம், தற்போது, கர்நாடக மாநிலம், பெங்களூரில், 2,750 பராமரிப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|